மறுபடியும்
பாற்கடலைக் கடைந்தபோது
வெண்ணைதான் வந்ததாம்.
கோபத்தில்
சிவன் தொண்டையில்
இருந்த விஷத்தை கக்கியதும்
இருமல் சரியானது.
பெனடிரில் சிரப்
ஒத்துக்கொள்வதில்லை
இப்போதெல்லாம்.
பிரம்மச்சுவடி
தொலைந்த வருத்தத்தில்
அரிச்சுவடி படிக்க
ஆரம்பித்து விட்டார் பிரம்மா.
எட்டாம் வாய்ப்பாட்டிற்குமேல்
வரவில்லையாம்
சிவன், பிரம்மா, விஷ்னு
மூவரும்
ஒன்றாம் வகுப்பிலிருந்தே
நண்பர்கள்தான் என்றாலும்
அடிக்கடி சந்திக்க முடிவதில்லை
தொழில்கள் வேறு வேறு.
நடுத்தரக் குடும்பங்கள் தான்
என்றாலும்
குகை மலைகள் தான்
வீடு என்பதால்
வாடகை தொல்லை இல்லை.
சூரியன் சந்திரனென்று
பவர்கட் எப்போதுமில்லை.
வாகனங்களுக்கு
பெட்ரோல் பிரச்சனையுமில்லை.
மனிதர்களுக்குத் தான்
எல்லாமே.
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அ...
29 comments:
:(
சூப்பருங்க..
காளமேகப்புலவர் ஞாபகம் வருகிறார். என்ன ஒரு நையாண்டி.. குறும்பு கொப்பளிக்கிற அழகான கவிதை..
good one!
அருமையான வரிகள்..
நகைச்சுவை இருந்தும் அதில் ஆயிரம் அர்த்தங்கள்...
வாழ்த்துக்கள் ...
i like this one.. too good :)
தோழர் ... அதி அற்புதம் ...
ஒரு அன்பின் வேண்டுகோள் ...
உண்மை இதழுக்கு இந்த கவிதையை அனுப்புங்களேன் ...
அவ்விதழில் தி.க. வுடன் முழுமையாக ஒத்துப் போகாதவர்கள் கூட எழுதுகின்றார்கள் ...
அங்கதமும் நிதர்சனமும் கலந்த உன்னத கவிதை இது ...
சில வாழ்க்கை சூழல்களால் இணையம் வருவது சில மாதங்களாக கடினமாக இருக்கின்றது ..
puththaandu muthal thodarnthu varuven தோழர்!
nantrigalum magilchiyum!!!
ஆமாங்க ஆமா!!!
அட ஆமாங்க.....
அவ்வ்வ்வ்......
ஆண்டவனும் மனிதனாய் பிறந்தால் அவனும் அனுபவித்தே ஆகவேண்டும்...
சிரிக்கவும்.. சிந்திக்கவும்... படியான நல்லதொரு கவிதை...
வாழ்த்துகள்...
சாமிகுத்தம்.இப்பிடியெல்லாம் சொன்னா சாமி
கண்ணைக் குத்திடும் வேலு !
நல்லாயிருக்குதுங்கோ...
:)
வித்தியாசமான சிந்தனை... அருமை..
உங்களது கர்ப்பனை திறன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி S.அசோக்
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி நண்டு @ நொரண்டு
நன்றி பதிவுலகில் பாபு
நன்றி ரிஷபன்
நன்றி samudra
நன்றி அரசன்
நன்றி இராமசாமி
நன்றி நியோ
நன்றி ஈரோடு கதிர்
நன்றி கலாநேசன்
நன்றி சித்ரா
நன்றி தஞ்சை வாசன்
நன்றி ஹேமா
நன்றி வெறும்பய
நன்றி பிரதீபா
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி தமிழ்த்தோட்டம்
வெலுத்து வாங்குறிங்க.....
கவிதை மிக கலக்கல்.....
மிக ரசித்தேன்....
பாராட்டுக்கள்.
ம்ம்ம்....கலக்குங்க வேலு
கவலை இல்லாத கடவு...ள் களைப்பற்றி...அசத்தல்.
நன்றி சி.கருணாகரசு
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி தாராபுரத்தான் ஐயா
//கோபத்தில்
சிவன் தொண்டையில்
இருந்த விஷத்தை கக்கியதும்
இருமல் சரியானது.
பெனடிரில் சிரப்
ஒத்துக்கொள்வதில்லை
இப்போதெல்லாம்.//
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிளையும் ஞாபகத்துக்கு வந்தது வேலு ஜி.
நன்றி சுந்தர்ஜி
சிந்திக்க வைத்த கவிதை......
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி சந்திரகௌரி
Post a Comment