குழந்தையின்
சிரிப்பில்
மெய்மறந்திருக்கும்
பொம்மைகள்.
குழந்தையின்
அழுகையில்
மௌனம் காக்கிறது.
உறக்கத்தையும்
விளையாட்டையும்
மழலை மொழிகளையும்
ரசிக்கும்
பொம்மைகள்
திரும்பப் பேச
எத்தனிப்பதில்லை எப்போதும்.
கடவுளின் தருணங்கள்
கவனிக்க மட்டுமே.
சிரிப்பில்
மெய்மறந்திருக்கும்
பொம்மைகள்.
குழந்தையின்
அழுகையில்
மௌனம் காக்கிறது.
உறக்கத்தையும்
விளையாட்டையும்
மழலை மொழிகளையும்
ரசிக்கும்
பொம்மைகள்
திரும்பப் பேச
எத்தனிப்பதில்லை எப்போதும்.
கடவுளின் தருணங்கள்
கவனிக்க மட்டுமே.