Saturday, January 1, 2011

திவ்ய தரிசனம்

கோயில் வாசலில்
கால் வைத்ததும்

பார்த்தாகி விட்டது,

முழுதாகத்தான் இருக்கிறது.


வெளிப்பிரகாரம்

சுற்றுகையில்

பாதியாகி விட்டது

மனம் கொஞ்சம்

படபடத்தது


உள்பிரகாரம்

சுற்றும் போது

ஒருமுறை

எட்டிப் பார்த்த்தில்

கால்வாசியாகி விட்டது.


கருவறைக்குள்

செல்லலாமா? வேண்டாமா?

மனம் சஞ்சலத்தது

தீபாராதனை காட்டும்போது

நெஞ்சுக் கூட்டில்

மேலும் படபடப்பு

முகத்தில் ஒரு கவலை


திருநீறு பூசியதும்

ஓடிச் சென்று

அடித்து பிடித்து

அந்தக் கடைசி தருணத்தில்

வாங்கியாகிவிட்டது

பொங்கல் பிரசாதம்


கடவுளைக் கண்டேன்

இன்னைக்கு

திவ்ய தரிசனம்ங்க

என்று வழியில்

பார்ப்போரிடமெல்லாம்

சொல்ல முடிந்த்து



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

24 comments:

Unknown said...

அட சூப்பருங்க... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

வயிறு நெறைஞ்சிருந்தா தான் சாமியும், சம்பிரதாயங்களும்.....!


ஆரம்பமே அமர்க்களம் வேலு .


ஆனா பாருங்க... பொங்கலை கலாநேசன் அள்ளிக்கிட்டாரு.

Unknown said...

வாங்க சத்ரியன். உங்களுக்கு இல்லாமலா...சேர்ந்தே சாப்பிடுவோம்.

VELU.G said...

எல்லாத்துக்குமே இருக்குதுங்க

ஆனா மொதல்லயே போயிடனும்

நானெல்லாம் ராத்திரியே துண்டை போட்டு வெச்சுட்டு வந்துடுவமில்ல

VELU.G said...

தங்கள் வருகைக்கு நன்றி சத்ரியன் மற்றும் கலாநேசன்

ஹேமா said...

வயிறு நிறைந்தாலே மனம் நிறையும்.சாமியும் தெரியும்.
2011 நல்லாதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் வேலு!

VELU.G said...

மிக்க நன்றி ஹேமா உங்களுக்கும் இவ்வாண்டு சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்

vasu balaji said...

அருமை வேலு. புத்தாண்டு வாழ்த்துகள்.

VELU.G said...

மிக்க நன்றி வானம்பாடிகள்

தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Kousalya Raj said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல பொங்கல் போராட்டம்.

அன்பரசன் said...

சூப்பர் வேலு..

சர்பத் said...

புத்தாண்டு மற்றும் "பொங்கல்" வாழ்த்துக்கள் :)

Stumblednews said...

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

VELU.G said...

மிக்க நன்றி சிவகுமாரன்

மிக்க நன்றி கௌசல்யா

மிக்க நன்றி இனியவன்

மிக்க நன்றி அன்பரசன்

மிக்க நன்றி சர்பத்

அகல்விளக்கு said...

அட....

சூப்பர் அண்ணா... :)

Thenammai Lakshmanan said...

மிக அருமை வேலு.. எல்லாரும் நினைப்பதுதான் இது.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

நல்லா இருந்துச்சுங்க பொங்கல்.

சிவகுமாரன் said...

நல்லா இருந்துச்சுங்க பொங்கல்.

Unknown said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

VELU.G said...

நன்றி அகல்விளக்கு

நன்றி தேனம்மை லெஷ்மணன்

நன்றி சிவகுமாரன்

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

ரிஷபன் said...

வயிறு அடங்கினால்தான் மனசு அடங்கும். அதனால்தான் அப்போதே கோவில்களில் பிரசாதம் வைத்து விட்டார்கள்.

VELU.G said...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ரிஷபன்

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...