Friday, April 2, 2010

அம்மாவிற்கான காரணங்கள்



























அரிசியில் பருப்பை கலந்ததோ

எண்ணெயில் நீரை ஊற்றியதோ

குளிக்க மறுத்து தரையில்

குதித்து அடம் பிடித்ததோ

அக்காவின் நோட்டில் கிறுக்கி

அடுப்பில் போட்டதோ

அப்பாவின் சட்டையை கிழித்து

குப்பை துடைத்ததோ

சாப்பிட பிடிக்காமல்

தட்டை உதைத்ததோ

என்னை அதட்ட

அம்மாவிற்கான காரணங்கள்

ஆயிரம் இருந்தும்

அழத் தயாராகும் என் முகம் கண்டதும்

செல்லமே என

ஆரத் தழுவிக்கொள்வாளே

எங்கு காண்பேன் அவளை

இனி இப்பூதளத்தில்



8 comments:

பிரேமா மகள் said...

'அம்மா"‍ கவிதை அருமை..

உங்களுக்கு யாரெனும் கர்ப்பிணி பெண்னை தெரிந்தால் இந்த கவிதையை பரிசாக தாருங்கள்.. மகிழந்து போவார்கள்..

VELU.G said...

//உங்களுக்கு யாரெனும் கர்ப்பிணி பெண்னை தெரிந்தால் இந்த கவிதையை பரிசாக தாருங்கள்.. மகிழந்து போவார்கள்..
//

நன்றி பிரேமா மகள்

கிருத்திகன் said...

பேசும்தெய்வத்திற்க்கான கவிதை நெகிழ வைக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா

VELU.G said...

//
பேசும்தெய்வத்திற்க்கான கவிதை நெகிழ வைக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா
//

நன்றி கிருத்திகன்

Unknown said...

Kulanthayai Oru Varam - AmmaVirkanna karam - varisayai!

" EDILLA PAYSUM DEIVANGAL"

VELU.G said...

நன்றி செல்வா

உமா said...

அருமை. வாழ்த்துக்கள்.

VELU.G said...

நன்றி உமா

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...