Showing posts with label கவிதை.... தத்துவம்... Show all posts
Showing posts with label கவிதை.... தத்துவம்... Show all posts

Thursday, June 24, 2010

மீன்களும் மனிதர்களும்

கடலோ ஆறோ

குளமோ குட்டையோ

கிணறோ....

மீன்கள் நீந்துகின்றன

நீருக்குள்....

நீரில் இருக்கும்

காற்றை சுவாசித்து...

நீரில் இருக்கும்

உணவை உட்கொண்டு...


கீழே மேலே நடுவே நீர்

எங்கெங்கும் நீர்...

நீரே உலகம்

நீரின்றி அமையாது

எம்மீனுக்கும் வாழ்க்கை...


மனிதர்களுக்கு மீன்கள்

விளையாட

வேடிக்கை பார்க்க

வேட்டையாடி உண்ண.....

.

.

.

சமதளமோ மலையோ

குன்றோ காடோ

பள்ளத்தாக்கோ...

மனிதர்கள் வாழ்கின்றனர்

காற்றுக்குள்.

காற்றில் இருக்கும்

காற்றை சுவாசித்து

நிலத்தில் இருக்கும்

உணவை உட்கொண்டு....


கீழே மேலே நடுவே காற்று

எங்கெங்கும் காற்று...

காற்றின்றி அமையாது

எம்மனிதர்க்கும் உலகு..


யாருக்கு மனிதர்கள்

விளையாட..

வேடிக்கை பார்க்க....

வேட்டையாடி உண்ண.....

Thursday, May 20, 2010

யார் வருவார் இங்கே?

சிறைதாண்டிச் செல்லும்

வாழ்க்கை

சிறுகச்சிறுக வெறுத்துபோனது...


பள்ளிச்சிறை முடித்து

பட்டச்சிறை முடிக்க

பொருளாதார வலைவிரித்து

காத்திருக்கும்

வீட்டுச்சிறை....

வேலைச்சிறை...


எல்லாமே சிறையெனில்

எது வெளி?


எல்லோரும் சிறையிலெனில்

நமை மீட்க

எவர் வருவார் இங்கே?


  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...