Showing posts with label கவிதை...காதல்....சிந்தனை.... Show all posts
Showing posts with label கவிதை...காதல்....சிந்தனை.... Show all posts

Tuesday, July 20, 2010

நீ...நான் மற்றும் இயற்கை

ஒரு மழைநாளில்

அறிமுகமானோம்

நதி நணைக்கும்

கோவில் வாசலில்...


மழையை ரசித்தபடி

இருந்த நீ

மழையில் நனைந்தபடி

இருந்த என்னை

நோக்கினாய் வியப்புடன்...


விழிகளில் பேசி

மொழிகளில் கலந்தோம்


உனக்கும் எனக்கும்

இலக்கியம் தத்துவமென

ஒரே சிந்தனை

ஒரே வகை எண்ணங்கள்


பரிமாறிக் கொண்டோம்

நம் சிந்தனைகளை...

இரவு பகல் எல்லையற்று

இடம் பொருள் தடையின்றி

பேசினோம்.....பேசினோம்....


ஞானிகள் அறிஞர்கள்

சிந்தனையாளர்கள்

ஸ்தம்பிக்க.....

இயற்கை அதிர....

பிறந்தன

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...


கணம் தாமதியாமல்

கலந்தாலோசித்த நம் பெற்றோர்

மணமுடித்தனர் நம்மை

இல்வாழ்க்கை துணைவர்களாய்..


காலங்கள் உருண்டன

நமக்கான

புதிய சிந்தனைகள்

புதிய தத்துவங்கள்

புதிய கோட்பாடுகள்...

ஸ்தம்பிக்க.....

பிறந்தன

குழந்தைகள்.... குழந்தைகள்...

இயற்கை சிரித்தது.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...