Friday, April 23, 2010
Tuesday, April 20, 2010
அரியர் எக்ஸாம்
விடைகானத் தவிக்கும்
வினாக்கள் தாளில்...
என்னத்தைக் கிழித்தாய்
எக்ஸாம் எழுதி
மனசோ உறுமும்...
விடைத்தாளின் வெண்மையை
கரைபடிக்க மனசில்லாமல்
சுவரை வெறிக்கும் கண்கள்...
அறிவாளியாய் எனை நினைத்து
கனுக்காலை இடிக்கும்
பின்சீட்டு நண்பன்...
இருக்கும் சீட்டே
இங்க் படாமல் இருக்க
அடிசனல் சீட் கொடுக்க
அலையும் தேர்வாளர்....
இவையின்றி வீட்டில்
என்ன செய்ய...
எப்படியும் செல்லவேண்டும்
எக்ஸாம் எழுத
Thursday, April 15, 2010
ராணுவத்தில் தங்கராசு
ராணுவத்தில் ஆளெடுக்க...
போய் சேர்ந்தான் தங்கராசு
ஆறடி உயரம் அகலக்கணக்கெல்லாம்
முடிஞ்சு
கண்பார்வை சரிபார்த்து
ஓடச்சொல்லி ஒளியச்சொல்லி
எல்லாம் முடிஞ்சு
எழுத்துத் தேர்வாம் கடைசியிலே...
ரிசல்ட்டில் பாசாகி
கவர்ண்மென்ட் ஆர்டரிலே
வேலைக்குப் போனான் பார்டரிலே..
அம்மா தங்கச்சிக்கெல்லாம்
அடுத்த மாச சம்பளத்தில்
ஆரணிப் பட்டெடுக்க
தோரணையோடு போனான்....
நாப்பது பேர் செத்தாங்கன்னு
சண்டைக்கு போச்சு ஒரு குரூப்பு
அதோடு போச்சு இவன் ட்ரூப்பு
பத்தாநாள் காத்தால பன்னென்டு
குண்டு பட்டு
பொட்டியிலே போனான் ஊருக்கே திரும்ப
இப்படியாக
ரானுவத்தில் ஆளெடுக்க
போய் சேர்ந்தான் தங்கராசு
Wednesday, April 14, 2010
குழந்தையாய் ஒரு வரம்
மெல்லிய சிறகொன்று ஒரு
பறவையின் இறகிலிருந்து பிரிந்து
காற்றில் வரையும் ஓவியம் போல்
என் அறையெங்கும் நிறைகிறாய்.....
தொலைந்ததாய் தேடும் என்முன்
வந்தமர்கிறாய்.....
இதைத்தானே தேடுகிறாய்
இல்லை இதையா தேடுகிறாய்
என்பதாய்
இருக்கும் எல்லாவற்றையும்
எடுத்தென் முன்னெங்கும் நிரப்புகிறாய்...
அம்மா அழைக்கிறாள் என்று
அவசரப்படுத்துகிறாய் அடுத்தகணம்
சும்மா சொன்னேன் என்று
சிரிக்கிறாய்......
கண்டுபிடிக்க சொல்லி என்
கண்முன் மறைகிறாய்.......
வெளித்தெரியும் கைகளும்
மறைந்து நோக்கும் கண்களுமாய்
எனைத்தானே தேடுகிறாய்
எனையா தேடுகிறாய் என்று உருகுகிறாய்...
கணப்பொழுதில் வந்தென்
கால் தழுவுகிறாய்
காற்றாய் மாறி என்உயிர் நிறைக்கிறாய்...
Friday, April 2, 2010
அம்மாவிற்கான காரணங்கள்
அரிசியில் பருப்பை
எண்ணெயில் நீரை ஊற்றியதோ
குளிக்க மறுத்து தரையில்
குதித்து அடம் பிடித்ததோ
அக்காவின் நோட்டில் கிறுக்கி
அடுப்பில் போட்டதோ
அப்பாவின் சட்டையை கிழித்து
குப்பை துடைத்ததோ
சாப்பிட பிடிக்காமல்
தட்டை உதைத்ததோ
என்னை அதட்ட
அம்மாவிற்கான காரணங்கள்
ஆயிரம் இருந்தும்
அழத் தயாராகும் என் முகம் கண்டதும்
செல்லமே என
ஆரத் தழுவிக்கொள்வாளே
எங்கு காண்பேன் அவளை
இனி இப்பூதளத்தில்
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அ...