மௌனம் என்பது சப்தமல்ல.........
என் மௌனத்தை
சத்தமாய் எதிரொளிக்கிறேன்
வார்த்தைகளில்லா வெளியில்
அது பரவுகிறது அதீதமாய்....
மௌனம்
உடைக்க முடியாத ஒரு பெரும்பாறை
மௌனம்
உளியால் செதுக்க முடியாத ஒரு சிலை
மௌனம்
சிலையால் வழங்க முடியாத ஒரு தெய்வீகம்.....
மௌனம்
வெடித்தே பரவுகிறது பெருவெடிப்பாய்..
காற்றாய்....நீராய்....மலையாய்....நெருப்பாய்....வெளியாய்...
கோள்களாய்...நட்சத்திரமாய்..பால்வெளித்திரள்களாய்....
பிரபஞ்சமாய்....
எதிரொளிக்கிறது
தனக்குள்ளேயும், வெளியேயும் நீண்டகாலமாய்...
காலம் காலமாய்
காலம் எனும் மாயையின்
பிடிக்குள் அடங்காததாய்.....
அதுவே இருளாகி...
அதுவே வெளிச்சமாகி...
மௌனம்
அதுவே பிரபஞ்சத்தை சத்தமாக்கியது
அதுவே பிரபஞ்சத்தை அசுத்தமாக்கியது
அதுவே பிரபஞ்சத்தை பிரளயமாக்கியது
அதுவே பிரபஞ்சத்தை களமாக்கியது
பெரு ஊளிக்குப் பின்
மௌனமாய் அடங்குகிறது
அத்தனை ஆட்டங்களையும்
அது கருவாக்கிக் கொண்டு
மௌனமாய் அடங்குகிறது
மௌனம் என்பது சப்தமல்ல
மௌனம் எப்போதும் இருப்பதில்லை நிசப்தமாய்...