
யோசித்து வைத்திருக்கிறேன்
உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுத....
ஒரு கவிதையை மறுபடியும்
கவிதையாய் வடிக்கமுடியுமா
தெரியவில்லை......
நீ அழகு என்பதை
நான் சொல்வதை விட
உன் தெருவில் நடந்த
சாலை விபத்துக்கள்
நிறைய சொல்கின்றன...
நீ அறிவு என்பதை
நான் சொல்வதை விட
உன் பல்கலைக்கழகப் பட்டங்கள்
நிறைய சொல்கின்றன....
உன் புன்னகையில்
பல இதயங்கள் நின்றுவிட்டன
என்பதை நான் சொல்வதை விட
இடுகாட்டுத் தகவல்கள்
நிறைய சொல்கின்றன....
உன் மலர்ப்பாதம் படும் பூமி
ஒரு மெல்லிய பனித்துளி
கண்ணத்தில் விழுந்ததைப்
போல் சிலிர்ப்பதை
நான் சொல்வதை விட
நீ நடந்த இப்பூமி
நிறைய சொல்கின்றன...
ஒரு நாளைக்கு
ஐந்து பொய்கள் தான்
என்பதால்
நாளை மீண்டும்
யோசித்து வைக்கிறேன்.