Showing posts with label கவிதை...காதல். Show all posts
Showing posts with label கவிதை...காதல். Show all posts

Saturday, August 28, 2010

என்னவளே அடி என்னவளே

யோசித்து வைத்திருக்கிறேன்

உன்னைப் பற்றி

ஒரு கவிதை எழுத....


ஒரு கவிதையை மறுபடியும்

கவிதையாய் வடிக்கமுடியுமா

தெரியவில்லை......


நீ அழகு என்பதை

நான் சொல்வதை விட

உன் தெருவில் நடந்த

சாலை விபத்துக்கள்

நிறைய சொல்கின்றன...


நீ அறிவு என்பதை

நான் சொல்வதை விட

உன் பல்கலைக்கழகப் பட்டங்கள்

நிறைய சொல்கின்றன....


உன் புன்னகையில்

பல இதயங்கள் நின்றுவிட்டன

என்பதை நான் சொல்வதை விட

இடுகாட்டுத் தகவல்கள்

நிறைய சொல்கின்றன....


உன் மலர்ப்பாதம் படும் பூமி

ஒரு மெல்லிய பனித்துளி

கண்ணத்தில் விழுந்ததைப்

போல் சிலிர்ப்பதை

நான் சொல்வதை விட

நீ நடந்த இப்பூமி

நிறைய சொல்கின்றன...


ஒரு நாளைக்கு

ஐந்து பொய்கள் தான்

என்பதால்

நாளை மீண்டும்

யோசித்து வைக்கிறேன்.

Monday, August 23, 2010

கடலை வியாபாரம்

அஞ்சாம் வகுப்பில்

அருந்ததியை சைட் அடித்ததோ.....

பத்தாம் வகுப்பில்

பவித்ராவின் பார்வைக்கு அலைந்ததோ....

பன்னிரெண்டாம் வகுப்பில்

வருஷம்16 படம்

பதினாறு முறை பார்த்துவிட்டு

குஷ்பு புகழ் பாடியதோ....

கல்லூரி வளாகத்தில்

அடுத்த டிபார்ட்மெண்ட்

அனிதாவிற்கு நூல்விட்டதோ...

வேலையில் சேர்ந்து

கிளார்க் கிருஷ்ணவேணி

வீட்டுக்கு வேலை செய்ததோ...

எதுவென்று தெரியவில்லை

பெண்ணேதும் அமையவில்லை

அருந்ததியோ பவித்ராவோ குஷ்புவோ

அனிதாவோ கிருஷ்ணவேணியோ

ஓகே சொல்லியிருந்தால்

வாழ்க்கை பிரகாசமாகியிருக்குமா

தெரியவில்லை!!!

Thursday, June 10, 2010

சொந்தம்

யாரும் செல்லமுடியாத

திருமணத்திற்கு

நான் போகவேண்டியதாயிற்று.....


மிகநெருக்க சொந்தங்களாம்...

மண்டபத்தில்

வந்தோர் கேட்டோர் யாரும்

முன்பின் அறிமுகமில்லை.....


நிழல் ஒதுங்க இடமில்லா

இடத்தில் நான் ஒதுங்க....


மின்னலென வந்தவள்

துள்ளலும் சிரிப்புமாய்

நிறைந்தாள்

அம்மண்டபத்தில்...

என் மனதில்....

எங்குமாய்.....


எல்லோரும் மிகநெருக்கச்

சொந்தகளாய் தெரிந்தனர்.


**********


டிஸ்கி 1) போன பதிவில் கவிதையை ஒரு கேள்வியுடன் முடித்திருந்தேன். அதற்கு பதில் நெருப்பென்பது நீர்மமோ திண்மமோ வாயுவோ அல்ல. நெருப்பென்பது ஒரு வினை(செயல்). செயலுக்கு வடிவம் கிடையாது. ஒரு பொருளுக்கு(உலோகம்,அலோகம், சேர்மம், தனிமம்...) மட்டுமே வடிவம் உண்டு. ஒரு அறிவியல் கேள்வி ஒன்றை கேட்டு அதை தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்குமே என்று ஒரு சின்ன முயற்சி. அதற்கு கவர்ச்சிகரமாக உதவியது காதல். அவ்வளவு தான் மற்றபடி ஏற்கனவே ஒர்க் அவுட் ஆன கெமிஸ்டிரிக்கே துண்டை காணோம் துணியை காணோம்னு ஒடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மறுபடியுமா? அவ்வளவு நல்லவியலா நீங்க?

2) போன பதிவை படித்தவுடன் போன் செய்த என் நண்பன் SUPER என்றான். எனக்கு அப்படியே தலைகால் புரியவில்லை. பின்னர் அட்ரஸ் என்ன என்று கேட்டான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த படத்தில் உள்ள பெண்ணின் அட்ரஸ் என்ன என்று கேட்டான். அப்ப நீ என் கவிதையை SUPERன்னு சொல்லலியா என்றேன் வடிவேல் முகத்துடன். போட நீயும் உன்னோட கவிதையும் அந்த அட்ரஸ் இருந்தா அதுவே ஒரு அழகான கவிதையாக இருந்திருக்குமே என்றான். அந்த நன்பனுக்கு ஸாரி இப்போதும் அட்ரஸ் கிடைக்கவில்லை.



  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...