அதிகாலை
ஐந்துமணி அலாரம்...
கடிகாரம் கண்டறிந்தவனை
கண்டபடி திட்டியபின்
கொதிக்கும் வெந்நீர்
குளியல் உடம்புக்கு
வெளியே...
சுடச்சுட காப்பி உடம்புக்கு
உள்ளே...
வழக்கமான உடைகளுக்கு
மேலே ஸ்வெட்டர்
தலைக்கு குல்லா
கைக்கு உறை எனும்
முப்பெரு (தெய்வக்) காவல்
கோவில் பிரகாரம் சுற்றி
குருக்கள் தேவாரம் கேட்க
வீட்டுத் தாழ்வாரக்கதவு
சாத்தினோமாவெனுங் குழப்பம்
தீபாராதனை நடுவே
பையன் எழுந்து
பல் துலக்கினானோ
பெண் எழுந்து
பெட் காப்பி குடித்தாலோ
எனுங்கவலை
திருவாசகத்துக்கு உருகாமல்
சர்க்கரைப் பொங்கலுக்கு உருக
மலங்க மலங்க விடிகிறது
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்நாட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அ...
6 comments:
நல்கவிதை...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
nice....
HAPPY PONGAL!
:)
சூடான சக்கரைப் பொங்கலில் ஊற்றிய நெய்யுருக,அதைப் பார்த்து நா ஊற,மனமும் உருகுவது இயற்கைதானே!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!
நன்றி கலாநேசன்
நன்றி சித்ரா
நன்றி பிரதீபா
நன்றி சென்னை பித்தன்
அவங்கவுங்க டேஸ்ட் அவங்கவுங்களுக்கு!
Post a Comment