Friday, September 17, 2010

விழிப்புணர்வு என்பது ஒரு மந்திரச் சொல்லா?

தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தர் முழக்கம்.

ஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வு தான் என்ன?

ஆதிநாட்களில் மனிதன் குகைகளில் வாழ்ந்தான். விலங்குகளை வேட்டையாடி உண்டான். விலங்குகளின் குகைகளை ஆக்ரமித்தான். விலங்குகள் மனிதனை எதிரியாக பார்த்தன. மனிதனுக்கு ஆபத்து எப்போதுமிருந்தது. குகை பாதுகாப்பனதாக இல்லை. இரவில் விலங்குகள் மனிதனை வேட்டையாடின. பகலிலும் பயம், இடி, மின்னல், மழை, வெய்யில் எதுவும் என்னவென்று தெரியாத காலம். எதன்மூலமும் ஆபத்து வரலாம் என்ற பயம். எனவே எந்த நேரத்திலும் விழிப்புடன் இருந்தான்.

ஒவ்வொன்றாக புரிந்து கொண்டான். இயற்கையை புரிந்தான். விலங்குகளின் தாக்குதல் முறைகளை அறிந்தான். இருந்தாலும் விழிப்புடன் இருந்தான். இப்போது இருப்பவனை அடுத்த நிமிடம் ஏதோ ஒரு விலங்கு அடித்துக் கொன்று விடுகிறது. பயம்.... பயம் காரணமாக வந்த விழிப்புணர்வு.

எச்சரிக்கையாக இருந்தான். அவன் ஒவ்வொரு செல்லும் எச்சரிக்கையாக இருந்தது. கால்கள், கைகள் எல்லாம் உணர்வுடன் இருந்தது. ஒரு இலை பட்டாலும் அது இலையென்று கண் பார்க்கும் முன் மூளை தெரிந்து கொண்டது. ஒவ்வொரு செல்லும் கண்ணாக எல்லாவற்றையும் மூளைக்கு காட்டிக் கொடுத்தது. மூளை யோசித்து செயல்பட்டது. அதிரும் பூமியை, திடீர் வெள்ளத்தை, கொளுத்தும் வெயிலை, புயல் மழையை எல்லாவற்றையும் கவனித்தான். சூரியன், சந்திரன், அமாவாசை, பௌர்ணமி எனப் பிரித்தான். தீயின் பயன் உணர்ந்தான், சக்கரத்தை கண்டறிந்தான். அறிவு வளர்ந்த்து மனிதன் பெருகினான். மற்றவை சிறுகத் தொடங்கின.

காலங்கள் சென்றன...........................................................

இன்று..................................

பதினெட்டு x பதினாறு என்ன என்று கணக்கிட கால்குலேட்டர், கம்ப்யூட்டர், சிம்ப்யூட்டர் என்று பல கருவிகள் வந்து விட்டன. நடக்க வேண்டியதில்லை சைக்கிள் பைக்காகி, பைக் காராகி, கார் விமானமாகி, விமானம் ராக்கெட்டாகி விட்டது. துவைக்க, சமைக்க எல்லாம் கருவிகள். வீடுகள், அலுவலகங்கள், நடைபாதைகள் எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.

அறிவியல் பல மடங்கு முன்னேறி விட்டது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை இன்னும் எங்கெங்கு வேண்டுமோ எல்லா இடங்களிலும் அறிவியல் முன்னேறி விட்டது.

ஆனால் எல்லாம் சரியான திசை நோக்கி செல்கிறதா?

என் வீட்டில் இருக்கும் அறிவியல் சாதனங்கள் டீ.வி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ், நான் ஓட்டும் பைக் ஏதேனும் பழதாகிவிட்டால் எனக்கு சரி செய்யத் தெரியாது. அவை எந்த முறையில் இயங்குகின்றன தெரியாது. அதற்கு மின்சாரம் எந்த ஏரியாவிலிருந்து நம் வீட்டிற்கு வருகிறது தெரியாது. நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்று தெரியாது. வீடு கட்டும் போது பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், கம்பி எங்கு தயாரிக்கிறார்கள், அதன் மூலப்பொருள் என்ன, எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியாது. பேனாவில் ஊற்றும் மை எதிலிருந்து தயாரிக்கிறார்கள், தெரியாது. என் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் கேஸ் என்ன, அது எதிலிருந்து தயாரிக்கிறார்கள், அதன் அதிகபட்ச அபாய அளவு என்ன.......தெரியாது. நம் பார்க்கும் தொலைக்காட்சியில் காட்சிகள் எந்த அலைவரிசையில் எங்கிருந்து எப்படி வருகின்றன, அலைவரிசை என்றால் என்ன...... தெரியாது. நாம் துவைக்கும் துணிக்கு, உடலுக்குப்போட பயன்படுத்தும் சோப்பில் என்ன என்ன கெமிக்கல் கலக்கிறார்கள், அதனால் அதிகபட்சம் நம் உடலுக்கு என்ன தீங்கு விளையும்..... தெரியாது.

எவருக்குமே எதுவுமே தெரியாது.................. இருப்பதை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் வெறும் முட்டாள்களாக.....

ஆனால் கேளுங்கள்........ அறிவியலில் மனிதன் கொடிகட்டி பறக்கிறான்.

ஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.

ஏன் கால், கை, முகம் எல்லாஇடத்திலும் இருக்கும் செல்கள் செத்தே இருக்கின்றன. பக்கத்தில் ஒருவர் தொட்டால் கூட உணர 5 நிமிடம் ஆகிறது.

எங்கே போயிற்று அந்த விழிப்புணர்வு.

ஒட்டு மொத்தமாய் ஒரு பேரழிவு ஏற்பட்டால் மனித குலம் இருக்குமா? அப்படி இருக்கும் மனிதரிடத்தில் ஏற்கனவே இருந்த அறிவியலைப் பற்றி என்ன பேச முடியும்?.

ஆதி நாட்களில் மனிதன் தான் கற்றுணர்ந்த எல்லாவற்றையும் அனுபவமாய் அடுத்தவருக்கு புரிய வைத்தான்.

இன்று கல்வி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டு இருக்கிறோம். நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்.

அறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசைவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?.

இல்லை இயல்பாக நம்மால் பழக, உணர முடிந்த அந்த விழிப்புணர்வை ஒரு மந்திரச் சொல்லாக மட்டுமே பயன்படுத்துவோமா?.

28 comments:

Saminathan said...

அருமையான கட்டுரை.

vasu balaji said...

திருதிருன்னு விழிப்புணர்வுதான் இருக்கு. நல்ல இடுகை வேலு:)

Chitra said...

அறிஞர்கள் மூத்தோர் சொன்ன விழிப்புணர்வு, நம் ஒவ்வொரு செல்லையும் தயாராய் வைத்திருக்கும் விழிப்புணர்வு, ஆதி மனிதனிடம் இருந்த பயம் நீக்கிய விழிப்புணர்வு, நம் முன்னே, பின்னே, மேலே எங்கும் அசையும் ஒவ்வொரு மிக மெல்லிய அசைவையும், சத்தத்தையும் உணரும் விழிப்புணர்வு, நம் மனித இனம் தழைக்க வழிவகுத்த அந்த விழிப்புணர்வு, விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?.


Alertness and Awareness :-)

Good post!

அன்பரசன் said...

//ஆதி நாட்களில் இருந்த விழிப்புணர்வு இப்போது இல்லவே இல்லை.//

கண்டிப்பாக வேலு.

பவள சங்கரி said...

அருமையாகச் சொன்னீர்கள்.....விழிப்புணர்வு இல்லையென்பதுதானெ இன்று பலவகையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது........ஆழ்ந்த சிந்தனைங்க......வாழ்த்துக்கள்.

Anonymous said...

விழிப்புணர்வுதான் மனிதனின் அப்டேட்

Unknown said...

ரொம்ப ஆழமா சிந்திச்சு எழுதியிருக்கீங்க.. நல்ல கட்டுரை..

Anonymous said...

Romba aalama yosichuirukkeenga velu. congrates. - Sakthi

Thenammai Lakshmanan said...

நியூட்டனின் விதிகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரியாமல் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கிறோம்//

அட உண்மைதான் வேலு..

ஹேமா said...

வேலு...வாசிக்க வாசிக்க ஏதோ தவறு செய்துகொண்டிருக்கிறோமா என்கிற உணர்வு !

அகல்விளக்கு said...

அருமை அண்ணா....

நாம் தொலைத்த அந்த விழிப்புணர்வை இன்று வேறு பல உயிரினங்கள் வளர்த்துக்கொண்டு வருகின்றன....

வருங்காலத்தில் ஆளும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை...

போட்டியே இல்லாமல் மனிதன் மட்டும்தான் இப்போது ஆட்சி செய்கிறான்... எதுவாயிருந்தாலும் போட்டி இருந்தால்தானே சுவாரசியமாக இருக்கும்.... :-)

//விவேகானந்தர்,வள்ளலார் போன்றோர் நம்மிடம் தேடிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?//

இது மட்டும் எனக்குப் புரியவில்லை அண்ணா... :(

vadivel said...

தனித்திரு விழித்திரு பசித்திரு - இது வள்ளலார் வார்த்தை .

அருண் பிரசாத் said...

Good post

settaikkaran said...

விழிப்புணர்வு என்பது குறித்த முரண்பட்ட சிந்தனைகள் பரவியிருப்பதனால் ஏற்பட்ட குழப்பங்களே எங்குநோக்கினும் தென்படுகின்றன. விழிப்புணர்ச்சி என்பதை சூழலோடு ஒன்றியிருத்தல் எனப் பொருள் கொள்ளலாம் என்று நான் கருதி வருகிறேன். sensitive to the surroundings...

VELU.G said...

// Blogger சேட்டைக்காரன் said...
விழிப்புணர்வு என்பது குறித்த முரண்பட்ட சிந்தனைகள் பரவியிருப்பதனால் ஏற்பட்ட குழப்பங்களே எங்குநோக்கினும் தென்படுகின்றன. விழிப்புணர்ச்சி என்பதை சூழலோடு ஒன்றியிருத்தல் எனப் பொருள் கொள்ளலாம் என்று நான் கருதி வருகிறேன். sensitive to the surroundings...
//
இதில் குழப்பமேதுமில்லை
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானதே
சூழலோடு ஒன்றியிருத்தல் தான்
ஏற்கனவே உள்ள அனுபவங்களை ஒப்பிட்டு பார்த்தல்
நிகழ்பனவற்றை துல்லியமாக உணருதல் என்று சில extra விஷயங்கள் இருந்தாலும்

சூழலோடு ஒன்றியிருத்தல் தான் முதல் மற்றும் அடிப்படையான விழிப்புணர்வு

நன்றி சேட்டைக்காரன்

VELU.G said...

நன்றி வடிவேல்

நீங்கள் சொல்வது போல அது வள்ளலார் வார்த்தை தான்

தங்கள் வருகைக்கு நன்றி

VELU.G said...

நன்றி பூந்தளிர்

நன்றி வானம்பாடிகள்

நன்றி சித்ரா

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி பதிவுலகில் பாபு

நன்றி சக்தி

நன்றி தேனம்மை லெஷ்மணன்

நன்றி ஹேமா

நன்றி அகல்விளக்கு

நன்றி வடிவேல்

நன்றி அருண்பிரசாத்

நன்றி சேட்டைக்காரன்

நிகழ்காலத்தில்... said...

Alertness and Awareness :-)


விழிப்புணர்ச்சி என்பதை சூழலோடு ஒன்றியிருத்தல் எனப் பொருள் கொள்ளலாம் என்று நான் கருதி வருகிறேன். sensitive to the surroundings...


இந்த இரண்டு கருத்துகளையும் ஆமோதிக்கிறேன்.

நீங்கள் சொல்லவந்ததை முழுமையாக சொல்லவில்லை என நினைக்கிறேன்..

வாழ்த்துகள்..

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். நல்ல பதிவு.

Anonymous said...

நல்ல சிந்தனை நண்பரே...போகிற போக்கில் இன்னும் எதை எல்லாம் இழக்கப் போகிறதோ மனித சமுதாயம்..

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி

ssk said...

முன்னோர்களுக்கு விழிப்புணர்வு இருந்ததால் என்ன கிடைத்தது.... அவர்கள் நேரம் உலகம் வளர வில்லை அதனால் விழிப்புணர்வு அதிக தேவை இருந்தது. மிருகங்களோ, பகைவரோ தாக்கலாம். இப்போது எதற்கு. சரி அதிகமான விழிப்புணர்வு வைத்து என்ன செய்தார்கள் ? யார் போய் பார்த்தார்கள்? இந்த மாதிரி விசயங்களை மேலும் பூடகமாக சொல்லி மக்களை ஏமாற்றி ஒரு கூட்டம் உள்ளது. கவனமாக, அவசரபடாமல் இருந்தால் போதும். எல்லாம் சரியாய் செய்ய முடியும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

very nice thought provoking post

VELU.G said...

நன்றி பார்வையாளன்

நன்றி நிகழ்காலத்தில்

நன்றி ராமலஷ்மி

நன்றி படைப்பாளி

நன்றி பனித்துளிசங்கர்

நன்றி அப்பாவி தங்கமணி

VELU.G said...

//முன்னோர்களுக்கு விழிப்புணர்வு இருந்ததால் என்ன கிடைத்தது....
//

இவ்வளவு தூரம் மனிதன் முன்னேற வாய்ப்புக் கிடைத்தது.

நாம் முன்னேறித்தான் இருக்கிறோம் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும் என்று அப்போதே இருந்திருந்தால் இவ்வளவு முன்னேற்றம் இருந்திருக்குமா?

//
மிருகங்களோ, பகைவரோ தாக்கலாம்.
//

இப்போது பகைவர் யாரும் தாக்கும் வாய்ப்பு இல்லாமல் தான் இருக்கிறீர்களா?


தங்கள் வருகைக்கு நன்றி ssk.
தங்களைப் போல் மாற்று கருத்துக்கள் கிடைக்கும் போது தான் நான் சரியான திசையில் செல்கிறேனா? என்று அளவிட முடிகிறது. நன்றி

Aathira mullai said...

விழிப்புணர்வு என்பது இப்போது வெறுப்புணர்வாக உள்ளது.நல்ல பதிவு வேலு...

ஆ.ஞானசேகரன் said...

அலசல்தான்

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_07.html

வலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...