Tuesday, September 14, 2010

கடவுள்..... மனிதன்......


புரபெஃஷர் ஆஷ் தன் எதிரிலிருக்கும் எல்லாரவை கவலையுடன் பார்த்தார்.

எல்லாரா இந்த அகடமிக்கில் புரபெஃஷரின் உதவியாளராக சேர்ந்திருந்தாள். புரபெஃஷர் எதிர்பார்க்கும் எல்லாத் திறமைகளும் இருந்தாலும் அவருக்கு தன்ஆய்வில் முழுக்க எல்லாராவை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்றகவலை இருந்தது.

அவர் மனதில் இருப்பதை படித்தது போல பேச ஆரம்பித்தாள் எல்லாரா. “சார்நீங்கள் நினைப்பது புரிகிறது, எல்லா ஆய்வுகளுக்கும் என்னைப் போலபெண்ணை பயன்படுத்த முடியுமா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். என்னுடைய முழு ஒத்துழைப்பு உங்களுக்கு எப்போதும் உண்டு. சிறப்பாகசொல்ல வேண்டுமென்றால் உங்கள் ப்ளாட் நெ.55 ஆய்வில் எனக்கு மிகுந்தஆர்வம் இருக்கிறது. அந்த ப்ளாட்டில் சொந்தமாக சிந்தனை செய்யக்கூடியஉயிரிகளை உருவாக்கி சாதித்து உள்ளீர்கள். அந்த உயிரிகளின் ஆற்றல் மிகசிறப்பானதாக இருக்கிறது. அங்கே சென்று ஆய்வு செய்யவும் நான் தயாராகஉள்ளேன்” என்று அவள் முடிக்கும் போது கண்களில் இருக்கும் அதீதஆர்வத்தை கவனித்தபடி பேசினார் ஆஷ்.

“எல்லாரா நான் கவலைப்படுவதெல்லாம் அந்த உயிரிகளைப்பற்றித்தான். 25 நாட்டிகல் ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் மேம்படுத்தபட்ட ஜீன்கள் மூலம்வளர்ந்த அந்த உயிரிகள் தங்களைத் தாங்களே சுயமாக காத்துக்கொள்ள, உணவுதயாரிக்க என்று பல வகைகளில் முன்னேறி விட்டன. அவைகளின் அந்த அதீதசிந்தனைத்திறன் தங்களை காத்துக்கொள்ள மட்டுமில்லாமல் தங்கள்அழிவிற்கும் காரணமாக அமைந்து விடுமோ என்ற பயம் தான்”.

“அந்த உயிரிகளின் கட்டமைப்பை எப்படி அமைத்துள்ளீர்கள்” என்றாள்எல்லாரா.

“நம் இனத்தைப் போலவே ஆண், பெண் என்ற இரு அமைப்பு, அவற்றின் மூலம்இனப்பெருக்கம் மற்றும் சுயசிந்தனை 450 டெசிபல் அதிகபட்ச அளவாகநிர்ணயிக்கப்பட்ட மூளத் என்ற அமைப்பு அதன் கண்ட்ரோலில் மற்ற உறுப்புகள்என்று அமைக்கப்பட்ட இதன் கட்டமைப்பு அது உருவாகும் விதம் பற்றியஅனைத்து ரகசியங்களும் என் உடலில் இவாஷ் மெமரியில் பதித்துள்ளேன்”. அந்த உயிரிகள் செய்யும் தவறுகள் மூலமாக அவைகள் அழிந்து விடாமல்இருக்க அங்கேயே சென்று அவற்றின் ஜீன்களில் அடிக்கடி மாற்றம் செய்துகொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அழிந்து விடுவோம் என்று தெரிந்தும்மீண்டும் மீண்டும் நிறைய தவறுகள் செய்கின்றன”.

“இந்த உயிரிகளை உருவாக்கியதின் நோக்கம் என்ன சார்”

நம் இனத்தின் மொத்த சிந்தனைத் திறன் அளவு 475000 டெசிபல் அளவு. இந்தஅளவிற்கு மேல் நம்முடைய சிந்தனைத் திறனை மாற்ற முடியவில்லை. நம்மை உருவாக்கிய கடவுள் எவ்வளவு அதீத சக்தி வாய்ந்தவராக இருந்தால்இவ்வளவு விஷயங்களை நாமே செய்தாலும் நம்முடைய சிந்தனைத் திறன்அளவு மட்டும் மாற்ற முடியாத்தாகவே உள்ளது. இந்த திறனை நாம்மேம்படுத்து வேண்டுமென்றால் சிந்தனைத் திறன் அதிகரிப்பது பற்றி அறிவுமேலும் வளர வேண்டும். அதற்காக இந்த உயிரிகளை பயன்படுத்துகிறேன். இந்த உயிரிகளுக்கு கிடைத்த சிந்தனைத்திறன் மூலம் எப்படி தங்களைவளர்த்துக் கொள்கிறது என்று கவனித்து வந்தேன். 10 டெசிபலிலிருந்து 450 டெசிபல் தன் சொந்த முயற்சியால் அதிகரித்துள்ள இந்த உயிரிகள் இன்னும் 15 நாட்டிகல் ஆண்டிற்குள் நம்முடைய அளவிற்கு வளர்ந்து விடும்” என்றார்.

“இந்த உயிரிகளின் வளரும் சிந்தனைத்திறன் நம் இனத்தைப் பாதிக்காதாபுரபெஃஷர்?” என்றாள் கவலையுடன் எல்லாரா.

‘” இல்லை, அதற்குள் இவற்றின் முயற்சிகளை பின்பற்றி சில மாடுலேஷன்கள்செய்து நம் சிந்தனையை பெருக்கிக் கொள்ள முடியும்”

“அதனால் என்ன பயன்?" என்றாள்.

கண்கள் அகல விரிய ஆதீத சந்தோஷத்துடன் எல்லாராவைப் பார்த்தார்புரபெஃஷர் “ நம்மை உருவாக்கி நம்மை தன் சொந்த விருப்பு வெறுப்பக்களைநம் மேல் திணித்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்தக் கடவுளை நெருங்கிவிடுவோம். அப்புறம் நாமும் படைபாளிகள் நமக்கென்று ஒரு தனிபிரபஞ்சத்தை படைக்க உருவாக்க அழிக்க என்று தனி சாம்ராஜ்யத்தையேபடைப்போம்.

“கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது புரபெஃஷர், இது உங்களுக்கு இருக்கும்பேராசையோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றாள்.

“பயப்படாதே பெண்ணே இது எல்லாம் நடக்கும், எனக்கு என்ன பயமென்றால்இப்போது பிளாட் நெ.55ல் காப்ட் வாயுவை அந்த உயிரிகள் அதிகம் உற்பத்திசெய்து கொண்டிருக்கின்றன. இது அந்த பிளாட்டையே நாசம் செய்து விடும், நான் மறைமுகமாக பல எச்சரிக்கைகள் அந்த உயிரிகளுக்கு உணர்த்தியும்அவை கண்டுகொள்ளாமல் தங்கள் அழிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன”. என்றார் புரபெஃஷர்

“இந்த வாயுவை நீங்கள் கட்டுபடுத்த முடியாதா?” எல்லாரா கேட்டாள்.

“நான் கட்டுபடுத்தும் அளவைத் தாண்டி அவை சென்று விட்டன. இப்போதுஎன்னால் செய்ய முடிவது அதன் ஜீன்களில் அந்த வாயுவை ஏற்றுக்கொள்ளும்வகையில் மாற்றம் செய்வது தான். ஆனால் இருக்கும் எல்லா உயிரிகளிளும்அந்த மாற்றத்தைச் செய்ய எனக்கும் 5 நாட்டிகள் ஆண்டுகள் ஆகும். இதில்உன்னுடைய பங்கு அந்த காலம் வரை அந்த வாயுவை ஒரு கட்டிற்குள் வைத்துஇருக்க வேண்டியது, அது எப்படி என்று உனக்கு பின்னால் விளக்குகிறேன். இதுதான் எனக்கு நீ செய்யும் முதல் வேலை” என்று முடித்தார் புரபெஃஷர்.

“மிக சந்தோஷம் சார் இந்த பிரபஞ்ச ரகசியத்தின் ஒரு பகுதியை அறியும்சோதனையில் ஒரு துளியில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதில் எனக்குபெருமைதான். ஆனால் பிளாட் நெ,55ற்கு நாம் இந்த உடலுடன் செல்லமுடியுமா? அப்படிச் சென்றால் நம்மை அடையாளப்படுத்தி விடமாட்டார்களா? எல்லாரா வீசினாள் ஒரு சிக்கலான கேள்வியை.

புரபெஃஷர் புன்னகைத்தார். “கவலைப்படாதே எல்லாரா அங்கே இந்தஉடலோடு சென்றால் நாம் எரிந்து விடுவோம். அந்த மாதிரி ஒரு அமைப்பைஉருவாக்கி வைத்திருக்கிறேன். நம் உடலை மிக மிக சுருக்கி ஒரு நுண்ணியஉருவமாகத்தான் அங்கே செல்ல முடியும். இந்த ரகசியத்தை நம் எதிரிகள் சிலபேர் தெரிந்து கொண்டு அவர்களும் இதே முறையில் அந்த பிளாட்டிற்கு சென்றுஅவற்றை அழிக்கப் பார்த்தனர். ஆனால் முதலில் தடுமாறிய அழிந்து போனஅந்த உயிரிகள் பின்னர் சுதாகரித்துக் கொண்டு நம்மவர்களையே அழிக்கும்திறன்களை பெற்று விட்டன.” என்றார் புரபெஃஷர்.

“இதே முறையில் நம்மையும் அழித்து விட்டால் என்ன செய்வது” என்றாள்எல்லாரா கவலையுடன்.

“கவலைப்படாதே எல்லாரா இப்போது இருக்கும் திறனை வைத்து நம்மைஅழிக்க முடியாதபடி சில மாற்றங்களை நம் உடலில் செய்து விடலாம். அதேபோல் அந்த ப்ளாட்டில் நம்மை போன்ற உருவத்தில் நம் எதிரிகள் கூடஇருக்கலாம் அதனால் நம் உடலில் x என்ற குறியீடு இருக்குமாறுஅமைக்கப்போகிறேன். அதை வைத்து நம்மை நாம் அடையாளம் காணமுடியும்” என்று முடித்தார் புரபெஃஷர்.

“எப்போது கிளம்புகிறோம் புரபெஃஷர்” என்றாள் எல்லாரா.

“இன்னும் 5 நாட்களில் அதற்கான பயிற்சிகள் எல்லாம் உனக்கு முடிந்த பின்னர்ஆம் நாள் காலையில் கிளம்புகிறோம்” . இப்போது நான் கிளம்புகிறேன்எல்லாரா. உன்னுடைய எல்லா சந்தேகத்தையும் இந்த 5 நாட்களில்தெளிவுபடுத்திக் கொள்ளலாம், இந்த முயற்சி வெற்றிகரமாக முடிந்தால் இந்தஉயிர்களின் உருவாக்கம் பற்றிய ரகசியங்களை உனக்கு கற்றுத் தருவேன்அதுவரை அந்த ரகசியங்கள் என் உடலில் உள்ள இவாஷ் மெமரியிலேயேஇருக்கும்” என்று கூறியபடி அறையை விட்டு வெளியேறினார் புரபெஃஷர்.

ஆறாம் நாள் காலை மிக நுண்ணிய உயிரியாக ப்ளாட் நெ,55வை நோக்கிவானில் பறந்தபடி இருந்த புரபெஷர் ஆஷ் எல்லாரவிடம் சொன்னார் “ஒருஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த பிளாட் உயிரிகள் தங்களுக்குள்பெயர் வைத்து அழைத்துக் கொண்டு இருக்கின்றன” .
விழி விரிய பார்த்த எல்லாரா “அப்படியா! ரொம்ப ஆச்சரியமாக உள்ளது, அப்படியென்றால் இந்த சிந்தனை மிக்க உயிரிகள் தங்களுக்கு என்ன பெயர்வைத்துக்கொண்டுள்ளன புரபெஷர்” என்றாள்.

“மனிதர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார் ஒற்றை வரியில்

“அவைகள் நமக்கு என்ன பெயர் வைத்துள்ளன”, என்று கேள்வியைதொடர்ந்தாள்.

“வைரஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார்.

அவைகள் அந்த பிளாட் நெ.55க்கு என்ன பெயர் வைத்துள்ளன என்றுவினவினாள்.

“பூமி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!” என்றார் பறந்தபடி.

••••••




டிஸ்கி: 1) உலகின் அனைத்து பேப்பர்களிலும் அன்று காலை மிக பரபரப்பானசெய்தி ஒன்று வெளியாகி இருந்தது. ஜீன்களையே தாக்கும் மிகக்கொடியவைரஸ் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது மனித குல வரலாற்றின் மிகப்பெரும்சாதனையாக கருதப்படுகிறது. அதன் உடலில் X என்ற அடையாளம்காணப்பட்டது.

2) உங்களைப்படைத்த கடவுளையே கொன்றுவிட்டு எந்தக் கடவுளை தேடிக்கொண்டிருக்கீறீர்கள் மனிதர்களே, இனி உங்களை காப்பாற்ற யார் வருவார்என்று வருத்தத்துடன் எல்லாரா பிளாட் நெ.55 விட்டு தன்னுலகம் நோக்கிகிளம்பினாள்.

3) மேலும் 15 நாட்டிகள் ஆண்டுகளுக்குப் பிறகு படிமமாயிருந்த x அடையாளமிட்டிருந்த வைரஸ்ஸின் மெமரியை ஆராய்ந்த ஒரு விஞ்ஞானிஅலறினார் ”நாம் ஒரு கருனை மிக்க கடவுளால் உருவாக்கப்பட்டுள்ளோம்என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாமெல்லம் வெறும்சோதனை எலிகளாகத்தான் இருந்தோமா??????????????????????”

•••••••

17 comments:

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் .. வெகு அருமையான படைப்பு ... ஜெய மோகன் அவர்களின் அறிவியற் சிறுகதைகளை 'விசும்பு' தொகுப்பில் படித்திருக்கிறேன் ... அவற்றுக்கிணையானது தான் உங்களின் 'கடவுள் ..மனிதன் ' ; உள்ளடக்க கருத்தில் விசும்புகளை விட மேலானதும்! மெமரியை மறந்து/மறைத்து விடுவது தான் அனைவரின் பிரச்சனையும் தோழர்!

Gayathri said...

மிகவும் சுவாரசியமாக உள்ளது உங்கள் பதிவு..வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுவாரஸ்யமான பதிவு...

ரிஷபன் said...

மிகவும் ரசிக்க முடிந்த கற்பனை.

vasu balaji said...

Very good one velu:)

Chitra said...

வித்தியாசமான கற்பனை. :-)

ஹேமா said...

கற்பனை அற்புதம் வேலு !
கடவுள் மனிதனைப் படத்தானா...
மனிதன் கடவுளைப் படைத்தானா !

ஈரோடு கதிர் said...

வேலு,

என்னென்னவோ எழுதறீங்க பாஸ்!

http://rkguru.blogspot.com/ said...

பதிவு அருமையாக உள்ளது....நல்ல சிந்தனை வளம் வாழ்த்துகள்

Anonymous said...

Dear Velu,

Sujadha innum saagavillai enbathai ungal padaippin moolam sollivitterkal. Really superp.Congrates. by Sakthi

அகல்விளக்கு said...

யப்பே.........

நான் வரல இந்த ஆட்டைக்கு.....

அன்பரசன் said...

நல்ல கற்பனை

மதுரை சரவணன் said...

அறிவியல் கலந்த கற்பனை நயமிக்க கதை.. ம்ம்ம் என்னமா பின்னுறீங்க.. வாழ்த்துக்கள்

Unknown said...

கலக்கலான தீம்.. சூப்பர்..

சுஜாதா கதையைப் படித்தமாதிரி இருந்தது..

அருமையான கற்பனைத்திறன் உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..

VELU.G said...

நன்றி நியோ

நன்றி காயத்ரி

நன்றி நண்டு @நொரண்டு

நன்றி வெறும்பய

நன்றி ரிஷபன்

நன்றி வானம்பாடிகள்

நன்றி சித்ரா

நன்றி ஹேமா

நன்றி ஈரோடு கதிர்

நன்றி r.k.guru

நன்றி சக்தி

நன்றி அகல்விளக்கு

நன்றி அன்பரசன்

நன்றி மதுரை சரவணன்

நன்றி பதிவுலகில் பாபு

Aba said...

கதை நன்றாக இருக்கின்றது... நல்ல கற்பனை..

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...