Thursday, April 15, 2010

ராணுவத்தில் தங்கராசு


ராணுவத்தில் ஆளெடுக்க...

போய் சேர்ந்தான் தங்கராசு


ஆறடி உயரம் அகலக்கணக்கெல்லாம்

முடிஞ்சு

கண்பார்வை சரிபார்த்து

ஓடச்சொல்லி ஒளியச்சொல்லி

எல்லாம் முடிஞ்சு

எழுத்துத் தேர்வாம் கடைசியிலே...


ரிசல்ட்டில் பாசாகி

கவர்ண்மென்ட் ஆர்டரிலே

வேலைக்குப் போனான் பார்டரிலே..


அம்மா தங்கச்சிக்கெல்லாம்

அடுத்த மாச சம்பளத்தில்

ஆரணிப் பட்டெடுக்க

தோரணையோடு போனான்....


நாலுநாள் சண்டையிலே

நாப்பது பேர் செத்தாங்கன்னு

சண்டைக்கு போச்சு ஒரு குரூப்பு

அதோடு போச்சு இவன் ட்ரூப்பு


பத்தாநாள் காத்தால பன்னென்டு

குண்டு பட்டு

பொட்டியிலே போனான் ஊருக்கே திரும்ப


இப்படியாக

ரானுவத்தில் ஆளெடுக்க

போய் சேர்ந்தான் தங்கராசு



17 comments:

அகல்விளக்கு said...

Be An Army Man...

அப்படிச் சொல்லித்தான பட்டாளத்துக்கு கூப்புடுறாங்க...

:-)

கிரேட் சல்யூட் தங்கராசு...

தோழி said...

நல்லா இருக்கு கவிதை... இன்று தான் உங்க ப்ளாக் பார்த்தேன்... இனி தொடர்ந்து பார்ப்பேன் நல்லா இருக்கு.. அத்துடன்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

VELU.G said...

//
அப்படிச் சொல்லித்தான பட்டாளத்துக்கு கூப்புடுறாங்க...

:-)

கிரேட் சல்யூட் தங்கராசு...
//

உங்கள் சல்யூட்டை தங்கராசு ஏற்றுக்கொள்வார் அகல்விளக்கு


//
Be An Army Man...

அப்படிச் சொல்லித்தான பட்டாளத்துக்கு கூப்புடுறாங்க...

:-)

கிரேட் சல்யூட் தங்கராசு...



//
Blogger தோழி said... நல்லா இருக்கு கவிதை... இன்று தான் உங்க ப்ளாக் பார்த்தேன்... இனி தொடர்ந்து பார்ப்பேன் நல்லா இருக்கு.. அத்துடன்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
//

மிக்க நன்றி தோழி

உங்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நன்றி

ஈரோடு கதிர் said...

நன்றாக இருக்கிறது கவிதை

VELU.G said...

// ஈரோடு கதிர் said...

நன்றாக இருக்கிறது கவிதை

//

நன்றி கதிர்

அஷீதா said...

kavidhai nalla irukkunga! vaazhthukkal :)

VELU.G said...

//Blogger அஷீதா said...

kavidhai nalla irukkunga! vaazhthukkal :)

//

நன்றி அஷீதா

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வீட்டை துறந்து
நாட்டை காக்க...

நம்மை காக்க
அவன் அழிந்து...

அவன் அழிந்து
நாம் வாழ்ந்து...

நாம் வாழ்ந்து
அவர்கள் புகழ் பாடுவோம்...

அருமையாக இருக்கின்றது. மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்.

VELU.G said...

//Blogger தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...
வீட்டை துறந்து
நாட்டை காக்க...
நம்மை காக்க
அவன் அழிந்து...
அவன் அழிந்து
நாம் வாழ்ந்து...
நாம் வாழ்ந்து
அவர்கள் புகழ் பாடுவோம்...
அருமையாக இருக்கின்றது. மேலும் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துகள்.
//

மிக்க நன்றி தஞ்சை.ஸ்ரீ.வாசன்

காமராஜ் said...

எனக்கு இந்தக்கவிதை வேறு மாதிரிப்புரிகிறது.வேலை என்பது பிழைக்க,சாக இல்லை.கெட்டபோரிடும் உலகம் இல்லாத நாள்வேணும்.இந்த நாட்டை ராணுவவீரர்கள் காப்பாற்றி களவானிகள் கையில் கொடுத்து விட்டார்கள் விலையுயர்ந்த அது சேட்டுகடையில் அஞ்சுகுக்கும் பத்துக்கும் அடமானம் கெடக்கிறது.அதை யார்போய் காப்பாற்ற மீட்ட?

VELU.G said...

//Blogger காமராஜ் said...
எனக்கு இந்தக்கவிதை வேறு மாதிரிப்புரிகிறது.வேலை என்பது பிழைக்க,சாக இல்லை.கெட்டபோரிடும் உலகம் இல்லாத நாள்வேணும்.இந்த நாட்டை ராணுவவீரர்கள் காப்பாற்றி களவானிகள் கையில் கொடுத்து விட்டார்கள் விலையுயர்ந்த அது சேட்டுகடையில் அஞ்சுகுக்கும் பத்துக்கும் அடமானம் கெடக்கிறது.அதை யார்போய் காப்பாற்ற மீட்ட?
//

உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி

Unknown said...

Nesathai yeluthi Irukikenka!
Nesama Neju kanakkuthu!

VELU.G said...

நன்றி செல்வா

கவிதன் said...

கவிதை ரொம்ப இயல்பா அருமையா இருக்கு சார்.

VELU.G said...

// , 2010 11:11 AM
Blogger கவிதன் said...

கவிதை ரொம்ப இயல்பா அருமையா இருக்கு சார்.
//

நன்றி கவிதன்

ரிஷபன் said...

கவிதை படிச்சப்ப கஷ்டமா இருந்திச்சு.. எத்தனை வித எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாய் போவது.. யுத்தம் இல்லாத உலகம் உருவாகட்டும்..

Anonymous said...

;'(

  நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம்.   எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம்.   எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே…   அரு...