Monday, March 22, 2010
நீரின்றி அமையாது உலகு
நேற்றிருந்த ஆற்றின்
மணல் வெளிகள்
இன்றில்லை
ஆறேயில்லை.............
ஆறிருந்த இடம் குளமாகி
குளம் குட்டையாகி
குட்டை கிணறாகி
கிணறு மழைநீர் தொட்டியாகி....
அதுவும் எலி வளரும் பட்டியானது
சாலை மரமிழந்தோம்
வயலிழந்தோம்
காடிழந்தோம்
மலையிழந்தோம்
ஈரக்காற்றினை இழந்தோம்
நம்மையும் இழந்தோம்
நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி......
Subscribe to:
Post Comments (Atom)
நான் இருந்ததிலிருந்து எட்டிய உயரங்கள் அதிகம். எட்டியதிலிருந்து எட்டாமலிருப்பது இன்னும் அதிகம். எட்டாமலிருப்பதை எட்டுவதும் எளிதே… அரு...
-
Iyn Rand எழுதிய சுயநலத்தின் சிறப்பு என்கிற புத்தகத்தில் இருந்து.......... சகலரும் சுயநலமிகள் சகல காரியங்களும் சுயநலம். பத்து பைசா பிச்சையி...
-
விட்டத்தைப்பார் சிரி ஏதோ தொலைந்ததாய் தேடு சுவற்றுப்பல்லியோடு பேசு சும்மா போகும் பூனையை விரட்டு தட்டெடுத்து நீயே பரிமாறு உண்டபின்...
-
இந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அ...
4 comments:
//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //
நச்சென்று.....
கவிதை அருமை.
Blogger அகல்விளக்கு said...
//நீரும் நானும் இல்லா
அமையும் உலகு
அமையாது நீரின்றி...... //
நச்சென்று.....
நன்றி அகல்விளக்கு
//Blogger ராமலக்ஷ்மி said...
கவிதை அருமை.//
நன்றி
pudicha lines podaanumna motha kavitaiyum podanum -totally superb
Post a Comment